சிங்கம் என்றல் என் தந்தைதான்
வியாழன், 30 ஏப்ரல், 2020
ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
காலை கண் விழிக்கும் போதே எங்கோ ஒரு பாடல் காதில் விழுந்தது. அதைக் கேட்கக் கேட்க என் மனதில் எழுந்த உணர்வுகளின் தொகுப்பே இப்பதிவு.
திங்கள், 16 டிசம்பர், 2019
ஞாயிறு, 17 டிசம்பர், 2017
Pudhumalar maganaaga indru poothullathu en thangai Meenavin illathil.
Pudhumalar maganaaga indru poothullathu en thangai Meenavin illathil. Maghizhchi. Magane Mannala vendum Manu dharmathudan. Many more blessings to you. Make your parents to be proud for parenting you. Be ever happy on other's happiness and service.
செவ்வாய், 28 பிப்ரவரி, 2017
வாழ்த்துக்கள் சொல்ல வந்தேன்.
வகுப்பு ஆசிரியையாக இந்த வருடம் நான் மாணவர்கள் மட்டுமே அடங்கிய வகுப்பான XII A விற்கு பொறுப்பேற்றுக் கொண்டேன். முதலில் மிகவும் பயந்த நான் நாட்கள் செல்லச் செல்ல அவர்களுள் ஒருவளாகக் கலந்தே போனேன்.
எவ்வளவுக்கு எவ்வளவு ஆட்டம் போடுகிறார்களோ அவ்வளவுக்கும் அன்பு மிக்கவர்கள். நன்றி இறைவனுக்கு. இந்தக் குழந்தைகளுக்கு இப்பொழுதுதான் பொறுப்பு ஏற்ற மாதிரி உள்ளது.
இதோ நாளை வாழ்வின் திருப்பு முனையை எதிர் கொள்ளவிருக்கிறார்கள். ஆம் நாளையிலிருந்து (02.03.2017-வியாழன்) அவர்களுக்கு +2 பொதுத் தேர்வு ஆரம்பமாகின்றது. அதைச் செவ்வனே செய்து மீண்டு நல்ல தேர்ச்சியுடன் வெளியேற எல்லாம் வல்ல இறைவன், அவர்களுக்கு உடல், உள்ள நலனையும், நல்ல சூழல்களையும், இடத்திற்கேற்ற விவேகத்தையும், எழுதுவதில் விவேகமான வேகத்தையும் தர வேண்டுமாயும், 100% மதிப்பெண்கள், முதல் மதிப்பெண்கள், 100% தேர்ச்சி என முன்னேறி வர அருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.செவ்வாய், 1 நவம்பர், 2016
அனுபவம் புதிது ! என் பிள்ளைகளிடம் கண்டேன்!
நேற்று 31.10.2016 என் மனதிற்குகந்த மாணவி ஸ்வேதாவிற்கு பிறந்த நாள். ஸ்வேதாவின் நண்பர்கள் என்னை என்னை சர்ப்ரைஸாக அவர்கள் முன் நிறுத்தத் திட்டமிட்டனர். இது சம்மந்தமாக என் மற்றொரு முன்மாதிரி மாணவன் வெங்கட்ராமன் ஒரு வாரம் முன்னதாகவே செல்லிடப்பேசியில் அழைத்துப் பேசினார். எனக்கும் என் மாணவர்களைப் பார்க்கும் ஆவல் இருந்ததால் ஏற்றுக் கொண்டேன். மேலும் ஞாயிறு அன்று மீண்டும் ஞாபகப் படுத்தினார்கள்.
ஏற்கெனவே திட்டமிட்டபடி 4.45 p . m போல் 12C பஸ் நிறுத்தத்தில் வெங்கட் காத்திருந்து என்னை அழைத்துச் சென்றார். செல்கின்ற வழியில் தன் கல்லூரி அனுபவங்களை கூறிக் கொண்டே வந்தார். மனதிற்குள் வாழ்வின் அடுத்த படியை என்ன அழகாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என் மாணவர் என புளகாங்கிதம் அடைந்தேன். So happy. வீட்டடின் அழைப்பு மணியை அழுத்திக் காத்திருந்தோம். ஸ்வேதாஎன்னைப் பார்த்த உடன் மிகுந்த பூரிப்பான புன்னகையுடன் வரவேற்றார்.
ஏற்கெனவே திட்டமிட்டபடி 4.45 p . m போல் 12C பஸ் நிறுத்தத்தில் வெங்கட் காத்திருந்து என்னை அழைத்துச் சென்றார். செல்கின்ற வழியில் தன் கல்லூரி அனுபவங்களை கூறிக் கொண்டே வந்தார். மனதிற்குள் வாழ்வின் அடுத்த படியை என்ன அழகாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என் மாணவர் என புளகாங்கிதம் அடைந்தேன். So happy. வீட்டடின் அழைப்பு மணியை அழுத்திக் காத்திருந்தோம். ஸ்வேதாஎன்னைப் பார்த்த உடன் மிகுந்த பூரிப்பான புன்னகையுடன் வரவேற்றார்.
திங்கள், 24 அக்டோபர், 2016
இறைவா! நன்றி!
மீனாவிற்கு இன்று பெண் குழந்தை பிறந்து உள்ளது. மகளே! உனக்கு என் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். ஒரு புது பெண் ஜென்மம் புதிய உலகைப் படைக்க வந்துள்ளது. இறைவா! தாயுமானவரே உம் சன்னதி ஏறி வருவேன். எனக்கு காலிலும் மனதிலும் உடலிலும் பலம் தர வேண்டும். ஏனெனில் நீர் இருப்பது உச்சியில்! நானோ மடுவில்! உயர விரும்பி உயரத்தில் உள்ள உன்னை சுகப் பிரசவம் செய்து கொடுத்த உன்னை நினைந்து நன்றி கூறுகிறேன்.
ஞாயிறு, 23 அக்டோபர், 2016
நடப்பவையெல்லாம் நன்மைக்கே
முடிவு எடுப்பதில் முத்தாரம் எப்பொழுதும் அசமந்தம் தான். ஒவ்வொன்றின் மீதும் ஏதோ ஒரு sentimental அட்டாச்மெண்ட் வைத்துக்கொண்டு, விட்டு விலக மறுத்து இரண்டுங்கெட்டான் ஆக நடுவில் நிற்பவள். சொல்லப் போனால் பிழைக்கத் தெரியாத தர்க்கவாதி.
தற்போது இருக்கும் பணி இடத்திலிருந்து விலக இப்பொழுது தான் மனம் முனைப்பாக உள்ளது. ஆம் சில பல விஷயங்கள் மனதை மிக வருத்துகிறது. மாத சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கை பள்ளிக்கே விட்டு வருகிறேன், சில நாட்கள் லேட்டாக செல்வதால். பனிச் சுமை அதிகமாகி வருகிறது. நமக்குத் தரப்படவேண்டிய மரியாதை சரியில்லையோ எனத் தோன்றுகிறது.
இத்தனை நாளும் என் வீடு போல் புத்தகங்களை, நோட்டுகளை, பொருட்களை என் விருப்பம் போல் அலமாரிகளில் வைத்துப் பராமரித்து வந்தேன். சில பல கசப்பான சம்பவங்களுக்குப் பிறகு பள்ளி வளாகம் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. அதில் ஒன்று அலுவலக அறை உள்ளிட்ட முதல்வர், துணை முதல்வர் அறைகள் மழலையர் வகுப்பறையாக மாறியது தான். எனவே துணை முதல்வருக்கான அறை கணினி ஆய்வகத்தின் ஆசிரியர் அறை என ஒதுக்கப்பட்டது.
ஒரு விதத்தில் இது நல்லதாகவே பட்டாலும், ஒரு உயர் அதிகாரியின் முன்பு சுதந்திரமாக எப்படி என் ஆய்வகத்தில் உலா வர முடியும்? மனது இயல்பாய் இல்லாமல் ஏதோ ஒரு கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த வருடம் எப்படியும் இப்பள்ளியிலிருந்து விலகி விட முடிவு செய்து விட்டேன். கடவுளே தொட்டதெற்கெல்லாம் காசு தேடும் இவ்வுலகத்தில் காசை வெறும் பேப்பராகப் பார்க்கின்ற பரந்த மனம் தருவாய். அப்படி எனக்குக் கிடைக்கின்ற pricefull பேப்பரை பலருக்கும் உதவும் வண்ணம் பிரயோகிக்க உதவுவாய் இறைவா. எனக்கு மாற்று வேலை நல்ல இடத்தில நல்ல வரவோடு அமைப்பாய் என் தலைவா!
இப்படிக்கு
Sentimental Idiot முத்தாரம்
தற்போது இருக்கும் பணி இடத்திலிருந்து விலக இப்பொழுது தான் மனம் முனைப்பாக உள்ளது. ஆம் சில பல விஷயங்கள் மனதை மிக வருத்துகிறது. மாத சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கை பள்ளிக்கே விட்டு வருகிறேன், சில நாட்கள் லேட்டாக செல்வதால். பனிச் சுமை அதிகமாகி வருகிறது. நமக்குத் தரப்படவேண்டிய மரியாதை சரியில்லையோ எனத் தோன்றுகிறது.
இத்தனை நாளும் என் வீடு போல் புத்தகங்களை, நோட்டுகளை, பொருட்களை என் விருப்பம் போல் அலமாரிகளில் வைத்துப் பராமரித்து வந்தேன். சில பல கசப்பான சம்பவங்களுக்குப் பிறகு பள்ளி வளாகம் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. அதில் ஒன்று அலுவலக அறை உள்ளிட்ட முதல்வர், துணை முதல்வர் அறைகள் மழலையர் வகுப்பறையாக மாறியது தான். எனவே துணை முதல்வருக்கான அறை கணினி ஆய்வகத்தின் ஆசிரியர் அறை என ஒதுக்கப்பட்டது.
ஒரு விதத்தில் இது நல்லதாகவே பட்டாலும், ஒரு உயர் அதிகாரியின் முன்பு சுதந்திரமாக எப்படி என் ஆய்வகத்தில் உலா வர முடியும்? மனது இயல்பாய் இல்லாமல் ஏதோ ஒரு கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த வருடம் எப்படியும் இப்பள்ளியிலிருந்து விலகி விட முடிவு செய்து விட்டேன். கடவுளே தொட்டதெற்கெல்லாம் காசு தேடும் இவ்வுலகத்தில் காசை வெறும் பேப்பராகப் பார்க்கின்ற பரந்த மனம் தருவாய். அப்படி எனக்குக் கிடைக்கின்ற pricefull பேப்பரை பலருக்கும் உதவும் வண்ணம் பிரயோகிக்க உதவுவாய் இறைவா. எனக்கு மாற்று வேலை நல்ல இடத்தில நல்ல வரவோடு அமைப்பாய் என் தலைவா!
இப்படிக்கு
Sentimental Idiot முத்தாரம்
வியாழன், 20 அக்டோபர், 2016
செவ்வாய், 18 அக்டோபர், 2016
மனதைத் தொட்ட வாசகம்
தன் உழைப்பால் வாழ்பவன் சிவன்!
பிறர் உழைப்பில் வாழ்பவன் எமன்!
சிவனும் எமனும் மனிதரே!
ஆட்டோ வாசகம்.
இதன் மூலம் சொல்ல வருவது சமயத்தில் உதவுவர் கடவுள் என்றால் தக்க நேரத்தில் உதவாதவன் எமன் எனக் கொள்ளலாம் என நான் எண்ணுகிறேன்.
எப்படி இருப்பினும் இவ்வாசகத்தில் சிவன் சம்மந்தப்பட்டுவிட்டதாலேயே I like it very much.
இருக்கும் வரை சிவனருள். இறக்கும் போது சிவன் மேற்பார்வையில் எமனருள்! இறந்த பின் சிவலோக வாசம். அங்கு என் தந்தை தாயுடன் நானிருக்க பற்றில்லாதவனாகிய சிவனை யாசிக்கிறேன்.
picture downloaded from my school lab
பிறர் உழைப்பில் வாழ்பவன் எமன்!
சிவனும் எமனும் மனிதரே!
ஆட்டோ வாசகம்.
இதன் மூலம் சொல்ல வருவது சமயத்தில் உதவுவர் கடவுள் என்றால் தக்க நேரத்தில் உதவாதவன் எமன் எனக் கொள்ளலாம் என நான் எண்ணுகிறேன்.
எப்படி இருப்பினும் இவ்வாசகத்தில் சிவன் சம்மந்தப்பட்டுவிட்டதாலேயே I like it very much.
இருக்கும் வரை சிவனருள். இறக்கும் போது சிவன் மேற்பார்வையில் எமனருள்! இறந்த பின் சிவலோக வாசம். அங்கு என் தந்தை தாயுடன் நானிருக்க பற்றில்லாதவனாகிய சிவனை யாசிக்கிறேன்.
picture downloaded from my school lab
சனி, 15 அக்டோபர், 2016
புதன், 12 அக்டோபர், 2016
Raja thatha's blogs: The marriage day eve for a bride and the transp...
Raja thatha's blogs: The marriage day eve for a bride and the transp...: The marriage day eve for a bride and the transplantation shock By P.R.Ramachander I saw this great write up in Tamil regard...
வெள்ளி, 30 செப்டம்பர், 2016
தன் தாயின் மேல் கொண்ட மீதூறிய அன்பினால் என் வகுப்பு மாணவன் - சுதன் . வேல் எழுதிய கவிதை
ஒரு மகன் நான் கருவில் வளர தன்
தாலியையே இறைக்குப் பிச்சை போட்டவளே!
வயிறு கிழித்து வலி தந்தேன்! அழ மறுத்தேன்!
மருத்துவச்சி கண் கலங்க நெஞ்சடைக்க அழுத்தவளே!
உயிர் பிழைத்தேன்! உனைத்தேடி குரலினேன் பச்சிளமாய்!
கடவுளோசை கேட்டது போல் மனம் குளிர மயங்கியவளே!
தட்டிலிருந்த உணவு அமுது போல் இல்லையடி!
காரணம் உன் உமிழ் நீர் அதிலில்லை என்னமுதவளே!
திறமைப்பால் ஊட்டி மேடைப் படியேறி புகழ் பறக்க
வீட்டுப் படியேறி கால்பதிய பூவிற்ற புனிதவளே!
உழைத்து உழைத்து உடல் ஒடுங்கத் தேய்ந்து
வளர்பிறையாய் எனை வளர்த்த வலியறியா வானவளே!
அழகூட்டா உலகழகியானாய் எந்தன் விழியுள்!
நான் ரசித்த முதல் பெண்ணும் நீயே முருகியவளே!
அறிவு பெற்று படிக்க வைக்க கழுத்தில் நகையிறக்கி
பதக்கம் என் கழுத்தில் ஏற வைத்த கனியவளே!
திருவிழாப் போல் என் திருமணம் நிகழ உனக்காசை
மரணமில்லாமல் நாம் அன்பில் வாழ வரம் கொடு என் மங்கவரமே....
தாலியையே இறைக்குப் பிச்சை போட்டவளே!
வயிறு கிழித்து வலி தந்தேன்! அழ மறுத்தேன்!
மருத்துவச்சி கண் கலங்க நெஞ்சடைக்க அழுத்தவளே!
உயிர் பிழைத்தேன்! உனைத்தேடி குரலினேன் பச்சிளமாய்!
கடவுளோசை கேட்டது போல் மனம் குளிர மயங்கியவளே!
தட்டிலிருந்த உணவு அமுது போல் இல்லையடி!
காரணம் உன் உமிழ் நீர் அதிலில்லை என்னமுதவளே!
திறமைப்பால் ஊட்டி மேடைப் படியேறி புகழ் பறக்க
வீட்டுப் படியேறி கால்பதிய பூவிற்ற புனிதவளே!
உழைத்து உழைத்து உடல் ஒடுங்கத் தேய்ந்து
வளர்பிறையாய் எனை வளர்த்த வலியறியா வானவளே!
அழகூட்டா உலகழகியானாய் எந்தன் விழியுள்!
நான் ரசித்த முதல் பெண்ணும் நீயே முருகியவளே!
அறிவு பெற்று படிக்க வைக்க கழுத்தில் நகையிறக்கி
பதக்கம் என் கழுத்தில் ஏற வைத்த கனியவளே!
திருவிழாப் போல் என் திருமணம் நிகழ உனக்காசை
மரணமில்லாமல் நாம் அன்பில் வாழ வரம் கொடு என் மங்கவரமே....
- சுதன் . வேல்
தன் தாயின் மேல் கொண்ட மீதூறிய அன்பினால் என் வகுப்பு மாணவன் - சுதன் . வேல் எழுதிய கவிதை இது. மிக நன்று. அன்னையின் அன்பினால் எதையும் சாதிப்பான் என்ற நம்பிக்கையுடன் கடவுளாசி யாசித்து , வாழ்வில் முதல் நிலைக்கு வளர வாழ்த்துகிறேன்!
வியாழன், 29 செப்டம்பர், 2016
Happy Birthday To my dear Sridevi
I don't know where you are.
With love and gratitude I always breath about you
God bless you and your family.
Hope you have your kids. Now My blessings are to them
With love and gratitude I always breath about you
God bless you and your family.
Hope you have your kids. Now My blessings are to them
என் வகுப்பறையில் இன்றைய பதிவுகள் 28-09-2016
இன்று முதல் பருவத்தின் இறுதி நாள். மாணவர்கள் அடுத்து வரும் மூன்று நாட்களையாவது விடுப்புக் கொடுத்தார்களே என்ற ஆதங்க சந்தோஷத்துடன் இருந்தனர். இரண்டு நாட்களாகவே மாணவர்களிடம், 12 அ , ஆ பிரிவினர் கலக்கப்பட்டு இரண்டாகப் பிரிக்கப்படவிருக்கிறார்கள் என்பது இலை மறை காயாகத் தெரிவிக்கப்பட்டு வந்தது. இன்று மதியம் அவர்கள் செய்முறை தேர்வு முடிந்து கணித வகுப்பிற்கு தயாராக இருந்த சமயம் நான் சென்று புது மாணவர் பட்டியலை வாசித்தேன். அது சமயம் மாணவர்களிடையே சிறு சல சலப்பு ஏற்பட்டது. அஃது அதிருப்தியா? அல்லது ஆதங்கமா? என அறியேன். ஆனால் எனக்கு மனது ஏனோ வலித்தது. மாணவர்கள் என்னமோ நம் கண் முன்னேதான் உலாவருவார்கள். ஆனாலும் ஏனோ பிரிவதாக மனம் வாடியது. புது மாணவர்களை நான் எப்படி வழி நடத்துவேன் என புரியவில்லை. கடவுள் தான் கை கொடுக்க வேண்டும். சுதன், சூர்யா, ஹரிஹரன் போன்றோர் ஷாகுல்-க்காகப் ( Today Shahul - absent)பேசினார்கள். ஷாகுல் ஏற்கெனவே மன அழுத்தத்தில் இருப்பதாகவும் இது தெரிந்தால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எனவே உகந்த உபாயம் ஒன்று செய்ய வேண்டிக் கொண்டார்கள். நானும் முயற்சி செய்கிறேன் என்றிருக்கிறேன். ஆனால் மாணவர்களிடம் என் பாடத்தை Mr.D.K எடுப்பார் என சும்மா கூறியுள்ளேன். ஆனால் அவர்கள் மொழிப் பாடத்திற்குப் பிரிந்து செல்வது போல என் வகுப்பிற்கு வருவார்கள் என்பதை நான் கூறவில்லை. வரும் திங்கள் அன்று அது அவர்களுக்கு ஆனந்தமாகவோ அல்லது அதிர்ச்சியாகவோ இருக்கக் கூடும்.
மாற்றங்கள் மாறாதது. முதல் சந்திப்பில் வேண்டாததாக இருக்கக் கூடும். காலப் போக்கில் பழகி விடும் என்றே நினைக்கிறேன். பார்க்கலாம்.
மாற்றங்கள் மாறாதது. முதல் சந்திப்பில் வேண்டாததாக இருக்கக் கூடும். காலப் போக்கில் பழகி விடும் என்றே நினைக்கிறேன். பார்க்கலாம்.
சனி, 17 செப்டம்பர், 2016
யாருடா அந்த பொண்ணு
வேலை முடிந்து வீட்டிற்குள் நுழையும் போது காதில் விழுந்த வாசகம் "யாருடா அந்த பொண்ணு". கேட்டதும் பகீர் என்றது. "அட காலக் கொடுமையே! இந்த சின்னப் பையன் கூட இந்தக் கூத்து அடிக்கிறானே என நினைத்துக் கொண்டு என் வீட்டு வாயிலில் நின்ற வண்ணம் நாலு அடியில் எட்டும் தூரத்தில் உள்ள சாய்ராம் வீட்டின் உள்ளே நடைபெறுவதை கண்ணுற்றேன்.
சாய்ராம் அவன் அம்மா கேட்பதற்கு எந்த பதிலும் கூறாமல் தலை குனிந்த வண்ணம் உட்கார்ந்திருந்தான். அம்மா திரும்பத் திரும்பக் கேட்டும் அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. இஃது இன்னும் தொடர்ந்தால் பையன் அடி வாங்க நேரிடும் என்பது உரைத்ததனால் நான் இடைமறித்தேன்
"என்ன சாய்ராம் அம்மா! என்ன நடந்தது?", கேள்வி விசாரிப்பதற்காக என்றாலும் மனது சுவாரசியமான தகவல் ஒன்றிற்கு அலைந்தது.அலைந்தது.
"அஃது ஒன்றும் இல்லைங்க! இவங்க மிஸ்-க்கு போன் போட்டேன். அப்ப அவங்க சொன்ன தகவல்தான் என் மனத்தைக் கஷ்டப் படுத்துகிறது"
" என்ன சொன்னாங்க" - ஆவலுடன் நான் கேட்டேன்.
"இரண்டு நாளாக கிரேயான் பென்சில் எதுவும் பத்திரமாகக் கொண்டு வர மாட்டேன் என்கிறான். அதனால் அவங்க மிஸ்க்கு போன் போட்டுக் கேட்டேன். அப்போ அவங்க கிளாஸ் பொண்ணோட கிரேயான் இவன் எடுத்து வந்து விட்டதா அந்த பொண்ணோட அம்மா புகார் செய்ததாகக் கூறினார்கள். அந்த பொண்ணு பேரைச் சொன்னார்கள். அதை மறந்து விட்டேன். அதான் கேட்டேன். ஒன்றும் சொல்ல மாட்டேங்கறான். கேட்டதும் சப்பென்றாகி விட்டது. ச்சே! இவ்வளவுதானா இதற்குத் தானா இவ்வளவு Build Up!.
இருந்தாலும் வந்த வேலையைப் பக்காவாக முடிக்க வேண்டும் இல்லையா. அதனால் கேட்டேன், "அப்புறம் மிஸ் என்ன சொன்னாங்க!"
"இது முதல் வகுப்பு படிக்கும் பிள்ளைகளிடம் சகஜம். பொருட்களை பத்திரமாக திரும்ப எடுத்துச் செல்லும் பக்குவம் அவர்களுக்குக் கிடையாது. நிறைய பிள்ளைகள் பொருட்களை இங்கேயே விட்டுச் சென்று விடுகிறார்கள் என அவங்க பதில் சொல்லி விட்டார்களாம். சொன்னதோடு விடாமல் எதற்கும் கேட்போமே என இருவரையும் விசாரித்தேன். இரு குழந்தைகளுமே திரு திருவென விழித்தார்கள் - என்று சொன்னாங்க. இவன் பொருள் இல்லை என நான் போன் போட்டுக் கேட்டால் அவர்கள் வேற புகார் வைக்கிறார்கள். கேட்டது நல்லதாய் போச்சு!".
"சரிங்க. அதான் மிஸ் சொல்லிட்டாங்க இல்ல. திரும்ப திரும்பத் விசாரிக்கிறது அவனுக்குக் கஷ்டமாக இருக்கிறது போல! விட்டுடுங்க" - எங்க கூறியவாறு என் வீட்டினுள் நுழைந்தேன்.
சாய்ராம் அவன் அம்மா கேட்பதற்கு எந்த பதிலும் கூறாமல் தலை குனிந்த வண்ணம் உட்கார்ந்திருந்தான். அம்மா திரும்பத் திரும்பக் கேட்டும் அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. இஃது இன்னும் தொடர்ந்தால் பையன் அடி வாங்க நேரிடும் என்பது உரைத்ததனால் நான் இடைமறித்தேன்
"என்ன சாய்ராம் அம்மா! என்ன நடந்தது?", கேள்வி விசாரிப்பதற்காக என்றாலும் மனது சுவாரசியமான தகவல் ஒன்றிற்கு அலைந்தது.அலைந்தது.
"அஃது ஒன்றும் இல்லைங்க! இவங்க மிஸ்-க்கு போன் போட்டேன். அப்ப அவங்க சொன்ன தகவல்தான் என் மனத்தைக் கஷ்டப் படுத்துகிறது"
" என்ன சொன்னாங்க" - ஆவலுடன் நான் கேட்டேன்.
"இரண்டு நாளாக கிரேயான் பென்சில் எதுவும் பத்திரமாகக் கொண்டு வர மாட்டேன் என்கிறான். அதனால் அவங்க மிஸ்க்கு போன் போட்டுக் கேட்டேன். அப்போ அவங்க கிளாஸ் பொண்ணோட கிரேயான் இவன் எடுத்து வந்து விட்டதா அந்த பொண்ணோட அம்மா புகார் செய்ததாகக் கூறினார்கள். அந்த பொண்ணு பேரைச் சொன்னார்கள். அதை மறந்து விட்டேன். அதான் கேட்டேன். ஒன்றும் சொல்ல மாட்டேங்கறான். கேட்டதும் சப்பென்றாகி விட்டது. ச்சே! இவ்வளவுதானா இதற்குத் தானா இவ்வளவு Build Up!.
இருந்தாலும் வந்த வேலையைப் பக்காவாக முடிக்க வேண்டும் இல்லையா. அதனால் கேட்டேன், "அப்புறம் மிஸ் என்ன சொன்னாங்க!"
"இது முதல் வகுப்பு படிக்கும் பிள்ளைகளிடம் சகஜம். பொருட்களை பத்திரமாக திரும்ப எடுத்துச் செல்லும் பக்குவம் அவர்களுக்குக் கிடையாது. நிறைய பிள்ளைகள் பொருட்களை இங்கேயே விட்டுச் சென்று விடுகிறார்கள் என அவங்க பதில் சொல்லி விட்டார்களாம். சொன்னதோடு விடாமல் எதற்கும் கேட்போமே என இருவரையும் விசாரித்தேன். இரு குழந்தைகளுமே திரு திருவென விழித்தார்கள் - என்று சொன்னாங்க. இவன் பொருள் இல்லை என நான் போன் போட்டுக் கேட்டால் அவர்கள் வேற புகார் வைக்கிறார்கள். கேட்டது நல்லதாய் போச்சு!".
"சரிங்க. அதான் மிஸ் சொல்லிட்டாங்க இல்ல. திரும்ப திரும்பத் விசாரிக்கிறது அவனுக்குக் கஷ்டமாக இருக்கிறது போல! விட்டுடுங்க" - எங்க கூறியவாறு என் வீட்டினுள் நுழைந்தேன்.
புதன், 14 செப்டம்பர், 2016
அன்னையின் தாலாட்டு
எம் அன்னை எங்களைத் தாலாட்ட ஒரு பாடலை அடிக்கடி பாடுவார்கள். இப்பாடல் எம் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் அத்துப்படி. நாங்களும் இக்குடும்பத்தில் புதிதாய் வருகை தரும் புது அங்கத்தினர்களுக்கு இதனைப் பாடியே தாலாட்டுகிறோம் என்பதில் பேருவகை கொள்கிறோம்.
பாடல் வரிகளை யாரோ ஒரு அன்பர் யூடியூபில் அழகாக வரித்திருந்தார். அவரின் உதவியால் பாடல் வரிகளை இப்பதிவில் சமர்ப்பிக்கிறேன். நன்றி அன்பரே!
மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த, குழந்தைத் தாய்க்குப் பாரமா, மண்ணுக்கு, மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த,குழந்தைத் தாய்க்குப் பாரமா, வாடிய நாளெல்லாம், வருந்தி வருந்தித் தவமிருந்து, வாடிய நாளெல்லாம், வருந்தி வருந்தித் தவமிருந்து, தேடிய நாள் தன்னில், செல்வமாய் வந்தவளே, தேடிய நாள் தன்னில், செல்வமாய் வந்தவளே, மலடி மலடியென்று, வையகத்தார் ஏசாமல், மலடி மலடியென்று வையகத்தார் ஏசாமல், தாய் என்ற, பெருமை தனை, மனம் குளிரத் தந்தவளே, தாய் என்ற, பெருமை தனை, மனம் குளிரத் தந்தவளே, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த,குழந்தைத் தாய்க்கு, பாரமா, மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த, குழந்தைத் தாய்க்குப் பாரமா, அழுதால் அரும்பு திரும், அண்ணாந்தால், பொன் உதிரும், அழுதால் அரும்பு திரும், அண்ணாந்தால், பொன் உதிரும், சிரித்தால், முத்து திரும், வாய் திறந்தால், தேன் சிதறும், சிரித்தால், முத்துதிரும், வாய் திறந்தால், தேன் சிதறும்,பிள்ளையைப் பெற்றுவிட்டால், போதுமா, பேணி, வளர்க்க வேனும், தெரியுமா, பிள்ளையைப் பெற்றுவிட்டால், போதுமா, பேணி, வளர்க்க வேனும், தெரியுமா, அல்லலைக் கண்டு, மனசு அஞ்சுமா, குழந்தை, அழுவதைக் கேட்டு, மனசு மிஞ்சுமா, அல்லலைக் கண்டு, மனசு அஞ்சுமா,குழந்தை, அழுவதைக் கேட்டு, மனசு மிஞ்சுமா, மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த, குழந்தைத் தாய்க்குப் பாரமா, - mannuku maram paarama marathku - movie:- Thai Piranthal Vazhi Pirakkum (தை பிறந்தால் வழி பிறக்கும்)
அன்னையின் தாலாட்டு
பாடல் வரிகளை யாரோ ஒரு அன்பர் யூடியூபில் அழகாக வரித்திருந்தார். அவரின் உதவியால் பாடல் வரிகளை இப்பதிவில் சமர்ப்பிக்கிறேன். நன்றி அன்பரே!
மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த, குழந்தைத் தாய்க்குப் பாரமா, மண்ணுக்கு, மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த,குழந்தைத் தாய்க்குப் பாரமா, வாடிய நாளெல்லாம், வருந்தி வருந்தித் தவமிருந்து, வாடிய நாளெல்லாம், வருந்தி வருந்தித் தவமிருந்து, தேடிய நாள் தன்னில், செல்வமாய் வந்தவளே, தேடிய நாள் தன்னில், செல்வமாய் வந்தவளே, மலடி மலடியென்று, வையகத்தார் ஏசாமல், மலடி மலடியென்று வையகத்தார் ஏசாமல், தாய் என்ற, பெருமை தனை, மனம் குளிரத் தந்தவளே, தாய் என்ற, பெருமை தனை, மனம் குளிரத் தந்தவளே, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த,குழந்தைத் தாய்க்கு, பாரமா, மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த, குழந்தைத் தாய்க்குப் பாரமா, அழுதால் அரும்பு திரும், அண்ணாந்தால், பொன் உதிரும், அழுதால் அரும்பு திரும், அண்ணாந்தால், பொன் உதிரும், சிரித்தால், முத்து திரும், வாய் திறந்தால், தேன் சிதறும், சிரித்தால், முத்துதிரும், வாய் திறந்தால், தேன் சிதறும்,பிள்ளையைப் பெற்றுவிட்டால், போதுமா, பேணி, வளர்க்க வேனும், தெரியுமா, பிள்ளையைப் பெற்றுவிட்டால், போதுமா, பேணி, வளர்க்க வேனும், தெரியுமா, அல்லலைக் கண்டு, மனசு அஞ்சுமா, குழந்தை, அழுவதைக் கேட்டு, மனசு மிஞ்சுமா, அல்லலைக் கண்டு, மனசு அஞ்சுமா,குழந்தை, அழுவதைக் கேட்டு, மனசு மிஞ்சுமா, மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த, குழந்தைத் தாய்க்குப் பாரமா, - mannuku maram paarama marathku - movie:- Thai Piranthal Vazhi Pirakkum (தை பிறந்தால் வழி பிறக்கும்)
சனி, 10 செப்டம்பர், 2016
தோட்டம் ஒன்று கலைக்கப்பட்டது - ஒரு கண்ணீர் கதை.
என்றைக்கும் போல் தான் இன்றும் விடிந்தது. காலையில் பள்ளி 9.30க்கு வந்தால் போதும் என சுற்றறிக்கை வந்ததால் தாமதமாகவே [ என்றைக்கு சீக்கிரம்????!!!!] கிளம்பினேன். ஆனால் நான் கிளம்பிய நேரத்திற்கு 9.00 மணிக்கெல்லாம் பள்ளியில் இருந்திருக்க வேண்டியவள்.
என் கிரகம் ஹவுஸ் ஓனர் வடிவில் வாசலில் வந்து நின்றது. ஆம். குருவிக் கூட்டைக் கலைப்பது போல் மாடியில் செல்லமென நான் வளர்ந்திருந்த தங்கங்களை அப்புறப்படுத்தக் கூறினார். ஏனெனில் மாடியில் வசிக்கும் குடும்பத்தார் சில நாட்களாக காய்ச்சலால் அவதியுறுகின்றனர். காரணம் கொசுவாக இருக்கலாம் என மாநகராட்சித் துறையினர் சந்தேகித்து பார்வையிட வந்திருந்தனர். அவர்கள் செடிகளில் தண்ணீர் தேங்கி இருக்கலாம்[ ஆனால் நானோ ஒரு டம்ளர் அளவிற்கு மட்டுமே தண்ணீர் ஊற்றுகின்றேன்]. நேற்று பெய்த மழை தண்ணீர் தேங்கி இருப்பதாகக் காட்டியிருக்கிறது.
A Flashback
காக்கை இட்ட எச்சங்கள் வேம்பு செடிகளாக உயர உயர வளர்ந்திருந்தது. ஏற்கெனவே ஹவுஸ் ஓனர் அதனை அப்புறப்படுத்தக் கூறியிருந்தார். வளர்ந்தபின் அப்புறப்படுத்துதல் ஆகாது என சப்பைக்கட்டு வேறு.
அந்த வேம்பு செடி என் friend . ஆம். எப்போ நான் மேல் மாடி சென்றாலும் அவள் அசைவு அதிகமாகவே இருக்கும். நானும் மற்ற செடிகள் அசைகின்றனவா என செக் செய்வதுண்டு. என் எண்ணமோ பிரமையா அது எனக்குப் பிடித்து இருந்தது.
வளர்த்த பெண்ணை நல்ல இடம் பார்த்து மனம் முடிக்க யாரும் பாடு படும் பெற்றோர் போன்ற நிலைமை எனக்கு. என் தோழியை நல்லிடம் சேர்ப்பது எவ்வாறு என சிந்திக்கையில் என் நினைவுக்கு வந்தார் என் பள்ளியில் உடன் பணிபுரியும் சகோதரர் ஸ்ரீதர் சாரும் என் வகுப்பு மாணவர்களும் தான். அவரிடம் கேட்டிருந்தேன். சரி என்றிருந்தார். என் வகுப்பிலும் கேட்டேன்,"மரம் நடுவதில் யாருக்கேனும் ஆர்வம் உள்ளதா", என்று. எப்போதும் போல் சுதன் தன் கையை உயர்த்தியது மனதுக்கு ஆறுதல் தந்தது. அப்துல் கலாம் பிறந்த நாளின் போது மரம் நடுதலை ஒரு event ஆக வைத்து விடலாம் என எண்ணி இருந்திருந்தேன். . .
Flashback over
இன்று தம்பிகள் என்னை சரமாரியாகத் திட்டி தீர்த்து விட்டனர். சொந்த வீடு போல் எதற்காக இப்படி செடிகள் நட்டு கஷ்டப்படுத்துகிறாய் என்று. திட்டினாலும் அப்புறப்படுத்த உதவினார்கள். இரண்டு மூன்று செடி பைகளை கில் பார்க் அருகில் வைத்து விட்டு வரச் சொன்னேன். ஏனெனில் செடிகள் மீது ஆர்வம் உள்ள வேறு எவரேனும் அதற்கு ஆதரவு தரக்கூடும் என ஆழமாக நம்பினேன். தம்பி இரு பைகளை கொண்டு வைத்து விட்டு வந்தான். இதற்கு இடையில் ஹவுஸ் ஓனர் கொஞ்சமாக வைத்துக் கொள்ளுங்கள். [நல்லவங்க தான்] இதற்கு காரணம் நாங்க இல்லைனு சொன்னார். ஆனால் நான் வைத்திருந்த செடிகள் எல்லாம் mosquitto repellent தான். அந்நேரம் வந்திருந்த மாநகராட்சி பணியாளர்கள் இதனை நாங்கள் அப்புறப்படுத்தக் கூறவில்லை அதற்கு பதிலாக தள்ளி தள்ளி வைக்கவே அறிவுறுத்தினோம் என்றார்.
இவ்வேலைகளை செய்யச் செய்ய கண்களில் இருந்தது கண்ணீர் அடக்க மாட்டாமல் வந்த வண்ணமாகவே இருந்தது. இருந்தும் செய்தென். அக்கா சில செடிகளை அவர்கள் வீட்டிற்கு கொண்டு சென்று விடுவதாகக் கூறியது ஒரு மிகப் பெரிய ஆறுதல்.இடையில் பள்ளிக்கு போன் செய்து பெர்மிஷன் or லீவு சொன்னேன். ஆனால் கண்டிப்பாக declaration form என் மாணவர்களுக்கு தர வருவேன் எனக் கூறினேன். இதைக் கூறக் கூட முடியாமால் துக்கம் தொண்டையை அடைக்க பேசினேன். ஒரு வழியாக 10 மணிக்கு மேல் புறப்பட்டு 10.30க்கு பள்ளியை அடைந்தேன். போகும் போது வேம்புகளை வண்டியின் முன்புறம் வைத்து எடுத்துச் சென்றேன். எங்கள் தலைக்கு மேல் உயர்ந்திருந்த செடியுடன் நாங்கள் வண்டியில் செல்வதை சிலர் விநோதமாகவே பார்த்தனர். என் பள்ளி பின்புற மருத்துவமனை வாயிலில் வாட்ச்மேனிடம் சொல்லி ஓரமாக வைத்துவிட்டு பள்ளி உள்ளே சென்றேன். பள்ளியில் இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரங்கோலி competition நடத்தினார்கள். என்னை மூன்று நடுவர்களில் ஒருவளாக அனுப்பித்தார்கள். பலரும் நன்றாகவே செய்திருந்தனர். Judgement வேலை முடிந்தபின் எக்ஸாம் முடியும் தருவாயில் 12.45 க்கு என் மாணவர்களை சென்று கண்டு declaration form மற்றும் சலான் கொடுத்து விட்டு நான்கு நாள் லீவு முடிந்து பரிட்சைக்கு வரும் போது பாடங்களை நன்கு படித்து வர அறிவுறுத்தி வழியனுப்பினேன். அப்போது சுதனை நிறுத்தி மரக் கன்றை கொண்டு வந்திருக்கும் செய்தியை கூறினேன். நடுவது எங்கே என்று கேட்டதற்கு playground என பதில் வந்தது. Let God bless him abundantly
மதியம் சுதனிடம் என் வேம்புகளை எடுத்துச் செல்ல சொல்லியிருக்கிறேன். மற்றவை அடுத்த போஸ்ட்-ல் தொடர்கிறேன். என் வேம்பு நல்லிடம்சென்று விடுவாள் என்ற நம்பிக்கையுடன் நான் முத்தாரம்.
வியாழன், 1 செப்டம்பர், 2016
எழுதுகிறேன் ஒரு கடிதம் !
அன்பும் பண்பும் பாசமும் மிகுந்த அப்பா அம்மாவிற்கு,
தங்கள் செல்ல மகள் வரையும் அன்பின் நகல். ஆம் இது மடல் அல்ல! என் நகல்.
கடவுளின் சந்நிதியில் நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். நான் நலமாக உள்ளதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நானறிவேன்.
பார்க்கும் இடங்களெல்லாம் நீங்களே நிறைந்து உள்ளீர்கள்!
அப்பா அறிவது! நான் பேசும் சாமர்த்தியத்தை உங்களிடம் கற்றேன். உங்கள் தொழில் பக்தி எனக்குள்ளும் நிறைந்து உள்ளது. ஆனால் என்ன செய்தாலும் உங்கள் punctuality மட்டும் எனக்கு வரவில்லை. மன்னிக்கவும். என்னிடம் உள்ள உங்கள் பண்பு உங்கள் பேச்சு எனக்கு பல வேளைகளில் பிழைக்கத் தெரியாதவள் என்ற பெயரை பெற்றுத் தந்துள்ளது.
அம்மா! நான் உங்களை மிகவும் இழந்ததாக உணர்கிறேன். யாரேனும் தன் பெண்ணை போற்றிப் பாதுகாக்கிறார்கள் என்றால் நான் உங்களை பற்றி எண்ணி மிகவும் ஏங்குகிறேன். மேலும் அவர்களின் நன்மைக்காவும் பிரார்த்திக்கிறேன். எத்தகு பெரிய ஹோட்டலில் உண்டாலும் அன்னையே நீ செய்து தந்த ரேஷன் கொட்டை அரிசி சாப்பாட்டிற்கு கூட ஈடாகவில்லை. வருமானத்திற்கு ஏற்ப நீவிர் செலவு செய்தீர். ஆனால் செலவிற்கு ஏற்ற வருமானத்திற்காக நாங்கள் அலைகிறோம். ஏனெனில் வாழ்வியல் முன்னேற்றம் என்பது இப்போது ஒரு சமூக அங்கீகாரம் என்று ஆகி விட்டது.
தங்கள் செல்ல மகள் வரையும் அன்பின் நகல். ஆம் இது மடல் அல்ல! என் நகல்.
கடவுளின் சந்நிதியில் நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். நான் நலமாக உள்ளதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நானறிவேன்.
பார்க்கும் இடங்களெல்லாம் நீங்களே நிறைந்து உள்ளீர்கள்!
அப்பா அறிவது! நான் பேசும் சாமர்த்தியத்தை உங்களிடம் கற்றேன். உங்கள் தொழில் பக்தி எனக்குள்ளும் நிறைந்து உள்ளது. ஆனால் என்ன செய்தாலும் உங்கள் punctuality மட்டும் எனக்கு வரவில்லை. மன்னிக்கவும். என்னிடம் உள்ள உங்கள் பண்பு உங்கள் பேச்சு எனக்கு பல வேளைகளில் பிழைக்கத் தெரியாதவள் என்ற பெயரை பெற்றுத் தந்துள்ளது.
அம்மா! நான் உங்களை மிகவும் இழந்ததாக உணர்கிறேன். யாரேனும் தன் பெண்ணை போற்றிப் பாதுகாக்கிறார்கள் என்றால் நான் உங்களை பற்றி எண்ணி மிகவும் ஏங்குகிறேன். மேலும் அவர்களின் நன்மைக்காவும் பிரார்த்திக்கிறேன். எத்தகு பெரிய ஹோட்டலில் உண்டாலும் அன்னையே நீ செய்து தந்த ரேஷன் கொட்டை அரிசி சாப்பாட்டிற்கு கூட ஈடாகவில்லை. வருமானத்திற்கு ஏற்ப நீவிர் செலவு செய்தீர். ஆனால் செலவிற்கு ஏற்ற வருமானத்திற்காக நாங்கள் அலைகிறோம். ஏனெனில் வாழ்வியல் முன்னேற்றம் என்பது இப்போது ஒரு சமூக அங்கீகாரம் என்று ஆகி விட்டது.
செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016
ஏதோ ஒரு பாடல் என் காதில் கேட்கும் அதைக் கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்.
எவ்வளவு உண்மையான வரிகள்!.
சில பாடல்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - இவ்வரிகளைக் கேட்கும் தோறும் ஞாயிறு நாட்களில் எங்கள் சிறு பிராயத்தில் எங்கள் பெற்றோரோடு நேரம் செலவிட்ட நாட்களில் பொழுதுபோக்காக அப்பா தன்னை ஒரு பாடகன் போல அசைவுகள் தந்த வண்ணம் பாடியதுண்டு. இதன் மூலம் அப்பா, "நல்ல பிள்ளைகளாக வளர்ப்பது எங்கள் கடமை அதனை பின்பற்றுவது உங்கள் கடமை", என எங்களுக்கு உணர்த்தியிருக்கக் கூடும்.
தூங்கப் போகையில் "இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன் " - பாடியிருக்கிறார்.
பாலும் பழமும் கைகளில் ஏந்தி மெட்டில் வேலும் மயிலும் கைகளில் ஏந்தி என முருகன் பாடலை அம்மா ரொம்ப அழகாக பாடுவார்கள்.
அம்மாவும் அப்பாவும் அப்படி ஒரு understanding . சண்டைகள் பல இருந்திருந்தாலும் பிரிவு அவர்களுக்குள் இல்லவே இல்லை.
மயக்கமா கலக்கமா பாடலை எத்தனை தடவை பாடி இருப்போம்.
அப்பாவிற்கு சிவாஜி நடிப்பு மிகப் பிடிக்கும். இருந்தாலும் எம்.ஜி.ஆர் படங்களையே பார்க்க விரும்புவார். கேட்டால் எம்.ஜி.ஆர். படங்களின் முடிவு சுபமாக இருக்கும். ஆனால் சிவாஜி நடிப்பிற்கு முக்கியத்துவம் தந்து எதிர்மறை முடிவுகளோடு படம் முடியும் என்பார்.
முதல் மரியாதை படத்தின் பாடல்கள் எங்களுக்கு குடும்பப் பாடலாகவே மாறிய கதை ஒரு சுவாரசிய நிகழ்வு ஆகும். அந்தப் படம் release ஆன சமயம் தான் என் சின்ன தம்பி பிறந்தான். அவனோ தொட்டிலில் தாலாட்டும் போது நீதானா அந்தக் குயில் எனப் பாடினால் அகா முக மலர்ந்து சிரிப்பான். எப்போது அப்படப் பாடலைக் கேட்கும் போதும் மனம் முழுதும் அப்பாவே நிறைவார்.
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் வரிகளைக் கூறும் போது அறிவியலை அதிகம் பேசுவார்.
ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது எனப் பாடும் தோறும் தன் கனவை வெளிப்படுத்துவார்.
இவற்றையெல்லாம் விடுங்கள். முத்துக்கு முத்தாக என் சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒன்றுக்குள் ஒன்றாக பாடலை கேட்டாலே அவருக்கு ஒட்டிக் கொள்ளும் பரவசம் கொஞ்ச நஞ்சமல்ல. அவர் தந்தை மற்றும் சித்தப்பாக்களை நினைந்து பர பரப்பாக பல விஷயங்கள் பேசுவார். குடும்ப உறவுகளில், சொந்த பந்தம் மேல் அவர் கொண்டிருந்த ஈடுபாடு அதீதம்.
அண்ணாமலை SERIAL தலைப்புப் பாடல் "உலகம் இருப்பது பாசத்துக்காக " பாடலை குலுங்கி குலுங்கி உருகிக் கேட்பார்.
எப்படியோ அப்பா உருவமாக உலகில் இல்லை என்றாலும் கேட்கின்ற பாடல்களில், படிக்கின்ற விஷயங்களில், பார்க்கின்ற காட்சிகளில் தத்ரூபமாக வாழ்கிறார். அப்பா இருந்தால் அங்கு அம்மா இல்லாமலா?
சிங்கம் என்றால் என் தந்தைதான் - இப்படித்தான் ஒவ்வொருவரும் நினைக்கிறார். நானும் அப்படித்தான்
FROM NA. MUTHUKUMAR SIR I DEDICATE THE SONG THEIVANGAL ELLAM THOTRE POGUM SONG TO MY FATHER
சில பாடல்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - இவ்வரிகளைக் கேட்கும் தோறும் ஞாயிறு நாட்களில் எங்கள் சிறு பிராயத்தில் எங்கள் பெற்றோரோடு நேரம் செலவிட்ட நாட்களில் பொழுதுபோக்காக அப்பா தன்னை ஒரு பாடகன் போல அசைவுகள் தந்த வண்ணம் பாடியதுண்டு. இதன் மூலம் அப்பா, "நல்ல பிள்ளைகளாக வளர்ப்பது எங்கள் கடமை அதனை பின்பற்றுவது உங்கள் கடமை", என எங்களுக்கு உணர்த்தியிருக்கக் கூடும்.
தூங்கப் போகையில் "இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன் " - பாடியிருக்கிறார்.
பாலும் பழமும் கைகளில் ஏந்தி மெட்டில் வேலும் மயிலும் கைகளில் ஏந்தி என முருகன் பாடலை அம்மா ரொம்ப அழகாக பாடுவார்கள்.
அம்மாவும் அப்பாவும் அப்படி ஒரு understanding . சண்டைகள் பல இருந்திருந்தாலும் பிரிவு அவர்களுக்குள் இல்லவே இல்லை.
மயக்கமா கலக்கமா பாடலை எத்தனை தடவை பாடி இருப்போம்.
அப்பாவிற்கு சிவாஜி நடிப்பு மிகப் பிடிக்கும். இருந்தாலும் எம்.ஜி.ஆர் படங்களையே பார்க்க விரும்புவார். கேட்டால் எம்.ஜி.ஆர். படங்களின் முடிவு சுபமாக இருக்கும். ஆனால் சிவாஜி நடிப்பிற்கு முக்கியத்துவம் தந்து எதிர்மறை முடிவுகளோடு படம் முடியும் என்பார்.
முதல் மரியாதை படத்தின் பாடல்கள் எங்களுக்கு குடும்பப் பாடலாகவே மாறிய கதை ஒரு சுவாரசிய நிகழ்வு ஆகும். அந்தப் படம் release ஆன சமயம் தான் என் சின்ன தம்பி பிறந்தான். அவனோ தொட்டிலில் தாலாட்டும் போது நீதானா அந்தக் குயில் எனப் பாடினால் அகா முக மலர்ந்து சிரிப்பான். எப்போது அப்படப் பாடலைக் கேட்கும் போதும் மனம் முழுதும் அப்பாவே நிறைவார்.
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் வரிகளைக் கூறும் போது அறிவியலை அதிகம் பேசுவார்.
ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது எனப் பாடும் தோறும் தன் கனவை வெளிப்படுத்துவார்.
இவற்றையெல்லாம் விடுங்கள். முத்துக்கு முத்தாக என் சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒன்றுக்குள் ஒன்றாக பாடலை கேட்டாலே அவருக்கு ஒட்டிக் கொள்ளும் பரவசம் கொஞ்ச நஞ்சமல்ல. அவர் தந்தை மற்றும் சித்தப்பாக்களை நினைந்து பர பரப்பாக பல விஷயங்கள் பேசுவார். குடும்ப உறவுகளில், சொந்த பந்தம் மேல் அவர் கொண்டிருந்த ஈடுபாடு அதீதம்.
அண்ணாமலை SERIAL தலைப்புப் பாடல் "உலகம் இருப்பது பாசத்துக்காக " பாடலை குலுங்கி குலுங்கி உருகிக் கேட்பார்.
எப்படியோ அப்பா உருவமாக உலகில் இல்லை என்றாலும் கேட்கின்ற பாடல்களில், படிக்கின்ற விஷயங்களில், பார்க்கின்ற காட்சிகளில் தத்ரூபமாக வாழ்கிறார். அப்பா இருந்தால் அங்கு அம்மா இல்லாமலா?
சிங்கம் என்றால் என் தந்தைதான் - இப்படித்தான் ஒவ்வொருவரும் நினைக்கிறார். நானும் அப்படித்தான்
FROM NA. MUTHUKUMAR SIR I DEDICATE THE SONG THEIVANGAL ELLAM THOTRE POGUM SONG TO MY FATHER
நான் இன்று ஆசிரியையாக இருப்பதற்கு மாணவர்களே காரணம். எப்படி?
காரணங்கள் இதோ.
அவர்கள் என்னை மதிக்கிறார்கள். அது தரும் போதை அளப்பரியது. சிலர் மதிப்பது போல் நடித்திருக்கலாம். ஆனால் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு என் மாணவர்களே காரணம்.
சந்தேகங்கள் எழுப்புவதன் மூலம் என்னை மேலும் படிக்கத் தூண்டுகிறார்கள். சிலர் எனக்குத் தெரிகிறதா என் அறிய கேட்டிருக்கலாம். ஆனால் அவர்களையும் திருப்திப்படுத்த நான் மிகையாகப் படிக்க வேண்டியிருக்கிறது.
அடாவடியாக நடப்பதன் மூலம் இப்படியும் ஆட்கள் உள்ளார்கள் என தெரிவிக்கிறார்கள். எனவே இது போன்ற ஆட்களை எப்படி ப[ண்]யன்படுத்துவது என என் மூளையை துருப் பிடிக்கா வண்ணம் பயன்படுத்துகிறேன்.
சில மாணவர்கள் ஒரு தடவை சொன்னாலே புரிந்து கொள்வர். சிலருக்கு சில தடவை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கும். பலருக்கு பல தடவை கூற வேண்டியிருக்கும். இதன் மூலம் பொறுமையை எனக்கு கற்பித்திருக்கிறார்கள்.
பல நேரங்களில் தவறுகளுக்காகக் கடிந்திருப்போம். அவற்றை மறந்து மன்னிக்கக் கூடியவர்கள். சில நேரங்களில் தவறு செய்யாமல் கூட திட்டு வாங்கியிருப்பார்கள். ஆனாலும் மன்னிப்பார்கள். [வேறு வழி இல்லை ]
மிக மிக மிக முக்கியமாக நான் படித்த syllabus மிகப் பழையதாக இருந்திருக்கும். ஆனால் இன்றைய மாணவர்களின் அறிவுத் திறனுக்கு தீனி போட வேண்டி புது syllabus படி பாடம் நடத்த தூண்டுகோலாய் இருக்கிறார்கள்
எனவே மாணவர்களே என்னையும் ஆசிரியையாக அங்கீகரித்த உங்கள் அத்துணை நல்லுள்ளங்களுக்கும் நன்றி!
வாழ்க நீவிர்! எனவே வளர்வோம் நாங்கள்!
நான் இன்று ஆசிரியையாக இருப்பதற்கு மாணவர்களே காரணம். எப்படி?
காரணங்கள் இதோ.
அவர்கள் என்னை மதிக்கிறார்கள். அது தரும் போதை அளப்பரியது. சிலர் மதிப்பது போல் நடித்திருக்கலாம். ஆனால் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு என் மாணவர்களே காரணம்.
சந்தேகங்கள் எழுப்புவதன் மூலம் என்னை மேலும் படிக்கத் தூண்டுகிறார்கள். சிலர் எனக்குத் தெரிகிறதா என் அறிய கேட்டிருக்கலாம். ஆனால் அவர்களையும் திருப்திப்படுத்த நான் மிகையாகப் படிக்க வேண்டியிருக்கிறது.
அடாவடியாக நடப்பதன் மூலம் இப்படியும் ஆட்கள் உள்ளார்கள் என தெரிவிக்கிறார்கள். எனவே இது போன்ற ஆட்களை எப்படி ப[ண்]யன்படுத்துவது என என் மூளையை துருப் பிடிக்கா வண்ணம் பயன்படுத்துகிறேன்.
சில மாணவர்கள் ஒரு தடவை சொன்னாலே புரிந்து கொள்வர். சிலருக்கு சில தடவை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கும். பலருக்கு பல தடவை கூற வேண்டியிருக்கும். இதன் மூலம் பொறுமையை எனக்கு கற்பித்திருக்கிறார்கள்.
பல நேரங்களில் தவறுகளுக்காகக் கடிந்திருப்போம். அவற்றை மறந்து மன்னிக்கக் கூடியவர்கள். சில நேரங்களில் தவறு செய்யாமல் கூட திட்டு வாங்கியிருப்பார்கள். ஆனாலும் மன்னிப்பார்கள். [வேறு வழி இல்லை ]
மிக மிக மிக முக்கியமாக நான் படித்த syllabus மிகப் பழையதாக இருந்திருக்கும். ஆனால் இன்றைய மாணவர்களின் அறிவுத் திறனுக்கு தீனி போட வேண்டி புது syllabus படி பாடம் நடத்த தூண்டுகோலாய் இருக்கிறார்கள்
எனவே மாணவர்களே என்னையும் ஆசிரியையாக அங்கீகரித்த உங்கள் அத்துணை நல்லுள்ளங்களுக்கும் நன்றி!
வாழ்க நீவிர்! எனவே வளர்வோம் நாங்கள்!
திங்கள், 22 ஆகஸ்ட், 2016
வாலு பசங்க!
22.08.2016 XII A
ஒவ்வொரு நாளும் என் வகுப்பில் நான் பெரும் அனுபவங்கள் எனக்கு நல்ல நல்ல படிப்பினைகளைத் தருகிறது. ஒரு ஆசிரியராக இல்லாமல் ஒரு சக மனுஷியாக அவர்களை நோக்கினால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் விளையாட்டும் அதனைத் தொடர்ந்த குஷியும் நமக்கும் ஒட்டிக் கொள்ளும்[ ஆசிரியையாக நோக்கினால் கொல்லும்]. அப்பப்பா என்னே ஒரு சமய சந்தர்ப்ப விமர்சனங்கள். இவை எல்லாம் திறமை என எண்ணினால் ஏன் அவர்களால் படிக்க இயலாது.
ஆனால் இன்று ஏனோ மாணவர்கள் கவனம் பாடத்தில் இல்லவே இல்லை. இஃது என்னை மிகவும் வேதனைப் படுத்தியது. எனக்குள் தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கவே செய்தது ஒருவேளை என் கற்பித்தல் திறன் சரியில்லையோ என எண்ணத் தோன்றியது. இறைவா என் மாணவர்களின் இயல்பை சரியாகப் படித்து படிப்பினை படிப்பிக்க எனக்கு வரம் பல தர வேண்டும். என் மாணவச் செல்வங்களின் நல்வாழ்வில் எனது பங்கும் இருக்கப் பிரயாசைப்படுகிறேன். இறைவா அருள்வாய்!
ஓம் நமச்சிவாய!
ஒவ்வொரு நாளும் என் வகுப்பில் நான் பெரும் அனுபவங்கள் எனக்கு நல்ல நல்ல படிப்பினைகளைத் தருகிறது. ஒரு ஆசிரியராக இல்லாமல் ஒரு சக மனுஷியாக அவர்களை நோக்கினால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் விளையாட்டும் அதனைத் தொடர்ந்த குஷியும் நமக்கும் ஒட்டிக் கொள்ளும்[ ஆசிரியையாக நோக்கினால் கொல்லும்]. அப்பப்பா என்னே ஒரு சமய சந்தர்ப்ப விமர்சனங்கள். இவை எல்லாம் திறமை என எண்ணினால் ஏன் அவர்களால் படிக்க இயலாது.
ஆனால் இன்று ஏனோ மாணவர்கள் கவனம் பாடத்தில் இல்லவே இல்லை. இஃது என்னை மிகவும் வேதனைப் படுத்தியது. எனக்குள் தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கவே செய்தது ஒருவேளை என் கற்பித்தல் திறன் சரியில்லையோ என எண்ணத் தோன்றியது. இறைவா என் மாணவர்களின் இயல்பை சரியாகப் படித்து படிப்பினை படிப்பிக்க எனக்கு வரம் பல தர வேண்டும். என் மாணவச் செல்வங்களின் நல்வாழ்வில் எனது பங்கும் இருக்கப் பிரயாசைப்படுகிறேன். இறைவா அருள்வாய்!
ஓம் நமச்சிவாய!
சனி, 20 ஆகஸ்ட், 2016
மனத்தைத் தொட்ட வாசகம்
இன்று OLA ஆட்டோ ஒன்றின் பின்புறம் நான் கண்ட வாசகம்
வறுமை வந்தால் வாடாதே!
வசதி வந்தால் ஆடாதே!
எத்துணை பொருத்தமான வாசகம். வாழ்க்கை பரிச்சையில் நாம் காணும் தேர்ச்சி வசதி அல்லது வறுமை ஆகும். எது வந்தாலும் அதனை முறையாகப் பயன்படுத்த நாம் கற்க வேண்டும். பரிட்சைக்குப் பின்பு படிப்பது வாழ்க்கையில் மட்டும் தான்..
என் தந்தை அடிக்கடி கூறும் வாசகம் மண்ணைத் தின்றாலும் மறைத்துத் திண். இதன் அர்த்தம் பிறருக்குப் பகிரக் கூடாது என்பதல்ல! நான் மண் சாப்பிடும் அளவு நிலை தாழ்ந்து உள்ளேன் எனப் பிறருக்குத் தெரிவிக்கக் கூடாது என்பதாகும். வறுமையில் செம்மை என்பதாகும். அதையே இவ்வாசகங்களும் உணர்த்துவதாக உணர்கிறேன்.
வறுமை வந்தால் வாடாதே!
வசதி வந்தால் ஆடாதே!
எத்துணை பொருத்தமான வாசகம். வாழ்க்கை பரிச்சையில் நாம் காணும் தேர்ச்சி வசதி அல்லது வறுமை ஆகும். எது வந்தாலும் அதனை முறையாகப் பயன்படுத்த நாம் கற்க வேண்டும். பரிட்சைக்குப் பின்பு படிப்பது வாழ்க்கையில் மட்டும் தான்..
என் தந்தை அடிக்கடி கூறும் வாசகம் மண்ணைத் தின்றாலும் மறைத்துத் திண். இதன் அர்த்தம் பிறருக்குப் பகிரக் கூடாது என்பதல்ல! நான் மண் சாப்பிடும் அளவு நிலை தாழ்ந்து உள்ளேன் எனப் பிறருக்குத் தெரிவிக்கக் கூடாது என்பதாகும். வறுமையில் செம்மை என்பதாகும். அதையே இவ்வாசகங்களும் உணர்த்துவதாக உணர்கிறேன்.
மனத்தைத் தொட்ட வாசகம்
இன்று OLA ஆட்டோ ஒன்றின் பின்புறம் நான் கண்ட வாசகம்
வறுமை வந்தால் வாடாதே!
வசதி வந்தால் ஆடாதே!
எத்துணை பொருத்தமான வாசகம். வாழ்க்கை பரிச்சையில் நாம் காணும் தேர்ச்சி வசதி அல்லது வறுமை ஆகும். எது வந்தாலும் அதனை முறையாகப் பயன்படுத்த நாம் கற்க வேண்டும். பரிட்சைக்குப் பின்பு படிப்பது வாழ்க்கையில் மட்டும் தான்..
என் தந்தை அடிக்கடி கூறும் வாசகம் மண்ணைத் தின்றாலும் மறைத்துத் திண். இதன் அர்த்தம் பிறருக்குப் பகிரக் கூடாது என்பதல்ல! நான் மண் சாப்பிடும் அளவு நிலை தாழ்ந்து உள்ளேன் எனப் பிறருக்குத் தெரிவிக்கக் கூடாது என்பதாகும். வறுமையில் செம்மை என்பதாகும். அதையே இவ்வாசகங்களும் உணர்த்துவதாக உணர்கிறேன்.
வறுமை வந்தால் வாடாதே!
வசதி வந்தால் ஆடாதே!
எத்துணை பொருத்தமான வாசகம். வாழ்க்கை பரிச்சையில் நாம் காணும் தேர்ச்சி வசதி அல்லது வறுமை ஆகும். எது வந்தாலும் அதனை முறையாகப் பயன்படுத்த நாம் கற்க வேண்டும். பரிட்சைக்குப் பின்பு படிப்பது வாழ்க்கையில் மட்டும் தான்..
என் தந்தை அடிக்கடி கூறும் வாசகம் மண்ணைத் தின்றாலும் மறைத்துத் திண். இதன் அர்த்தம் பிறருக்குப் பகிரக் கூடாது என்பதல்ல! நான் மண் சாப்பிடும் அளவு நிலை தாழ்ந்து உள்ளேன் எனப் பிறருக்குத் தெரிவிக்கக் கூடாது என்பதாகும். வறுமையில் செம்மை என்பதாகும். அதையே இவ்வாசகங்களும் உணர்த்துவதாக உணர்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)